ஒரு சோறு – ஒரு பார்வை

கோடம்பாக்கம் மஹாலிங்கபுரம் பிரதான சாலையில், புதிய மேம்பாலத்திற்கு ஒரு புறத்தில் இருக்கிறது ஒரு சோறு – அசைவ உணவகம். லயோலா கல்லூரியிலிருந்து கோடம்பாக்கம் வரும்போது, பாலத்திற்கு இடதுபுறம் இருக்கிறது, முழுவதும் குளிரூட்டப்பட்ட உணவகம். சென்ற வாரம் ஒரு மதியம் சென்றேன், நண்பனுடன். சாதாரணமாக சாலையில் செல்லும்போது அவ்வளவாகத் தெரியாது; சற்று உள்வாங்கி இருக்கும். அகலம் குறைவான வாசல், உள்ளே சென்றதும் ஐந்து, நால்வர் உட்காரும் மேசைகள். என்னடா இது! இவ்வளவு சிறிய இடமா இருக்கே? இல்லை. உள்ளே […]

தயக்கம், வியப்பு, உற்சாகம், மழை

நான் எழுத ஆரம்பித்த நேரமோ என்னவோ, மூன்று மாதங்களாகப் பதிவர் சந்திப்பே நடைபெறவில்லை. ஒரு வழியாக நேற்று நடந்தது. சந்திப்பு ஐந்து மணிக்கு, மெரினாவில், காந்தி சிலை முன்பு. நான்கு மணிக்கு கேபிள்ஜி சொன்னபடி பதிவர் வெங்கி ராஜாவை அசோக் பில்லரில் கோர்த்துக்கொண்டு மெரினா நோக்கிச் சென்றேன். காந்தி சிலை அடையும்போது மணி 4.45, ஆங்காங்கே மக்கள் கூட்டம். ‘அங்க பாருங்க, கேமராவும் கையுமா நாலு பேரு நிக்கிறாங்க, நம்ம சங்கத்து ஆளுங்களாத்தான் இருக்கும்’, என்றார் வெங்கி. […]

யார் குருடன்?

ஆதவன் அணையும் அந்தி வேளை அழகாக இருந்தது ஆகாயக காட்சி பறவைகளின் அணிவரிசை பார்த்தேன் பரவசமாய் மாலை நேரத்து மழையை வரவேற்க்கும் வானவில் மகிழ்ந்தேன் அதைக்கண்டு சற்றே திரும்பினேன் என்னை கடந்து சென்றனர் சில கண் தெரியாதவர்கள் நான் கண்ட ரசித்தவற்றை இவர்கள் கண்டு ரசிக்க முடியாதே என்று கண் கலங்கினேன் திடீரென ஒரு அசரிரீ என் முன்னால் கேட்டது “ஏண்டா சாவு கிராக்கி கண்னு தெரியாதா உனக்கு காயப் போட்டிருக்க கருவாடு மேல நடக்கிற” அப்போதுதான் […]

சந்தர்ப்பவாதக் கொள்ளைகள் – 2

நண்பர் ஒருவர் தனது அலுவலகத்திற்குப் புதிதாக இணைய இணைப்பு வாங்க எண்ணினார். ஏற்கனவெ அவரது வீட்டில் 512kbps unlimited வைத்திருக்கிறார், ஏர்டெல். அதன்மீது அவருக்குத் தனி மதிப்பு உண்டு, எனக்கும்தான். அதன் சேவைதான் அவரறிந்தவரை மிகவும் சிறந்ததாம். எப்பொதும் முதல் தேர்வு அதுதானாம். வாடிக்கையாளர் சேவை மையத்தைத் தொடர்பு கொண்டார். அதைப் பற்றிப் பேசிய பிறகு, சிறிது மற்ற விசயங்களைப் பற்றியும் பேசினார். அப்படியே விசாரித்துக்கொண்டிருக்கையில் அவர் கேள்விப்பட்ட விசயம் ஒன்றால் ஆடிப்போய்விட்டார். 512kbps unlimitedன் மாத […]

கதையின் சுதந்திரம்

மாப்ள, நேத்து உன்னைப் போல் ஒருவன் படம் பாத்தேன்டா. இதெல்லாம் ஒரு படமா? பிடிக்கவேயில்லடா எனக்கு. தீவிரவாதத்தை தீவிரவாதத்தாலயே அழிக்கிற மாதிரி ஒரு கதை. தீவிரவாதின்னாலே முஸ்லிமாத்தான் காட்டனுமா? ஏன், இந்துத் தீவிரவாதியக் காட்டி, அவன அழிக்கிற மாதிரி காட்டக் கூடாதா? அப்போ தீவிரவாதின்னாலே இந்துதானான்னு கேக்க மாட்டியா? அப்போ ரெண்டு இந்து, ரெண்டு முஸ்லிம்னு காட்டிருக்கலாம். சரி சமமா போய்ருக்கும். அப்போ கமல் இந்து முஸ்லிம் பிரச்சனையக் கிளப்புறார்னு ஒன்னு கண்டுபிடிக்க மாட்டீங்களா? இல்ல மாப்ள. […]

சிறுகதைப் பட்டறையில் பா.ரா.

சிறுகதைப் பட்டறை – எனது பார்வையில் – இதற்கு முன்னால் எழுதியது. சிறுகதைப் பட்டறையில் பா.ராகவன் அவர்களுடைய பகுதி இதோ. பவர் பாயிண்டில் அவர் அளித்ததை முடிந்த அளவு குறிப்பு எடுத்து இங்கு அளித்திருக்கிறேன். பத்திரிக்கைகளுக்கு எழுதும் ஆர்வமுள்ளவர்களுக்கு இது கண்டிப்பாகப் பயன்தரும். — சிறுகதை நன்கு பிடிபட்ட, நவீன இலக்கியப் பரிச்சயமுள்ள, சிற்றிதழ் வாசிப்பு அனுபவமுள்ள நண்பர்களுக்கு இது உதவாது, வார இதழ்களில்/பத்திரிக்கைகளில் எழுத விருப்பம் உள்ளவர்களுக்கே இது. நல்ல சிறுகதைக்கு இலக்கணம் கிடையாது உண்மையை […]