வெள்ளை மின்னலே…!

நீ என் அகத்திற்கு வருகிறாய் என்றதும் என் அகத்தின் உவகை உலகறியாதது. குறுகுறுப்புடனும் கூதுகலத்துடனும் காத்திருந்தேன் கண்மணியே, ஈராறு நாட்கள் பலநூறு யுகங்கள் போல்! என் தந்தை தமையனுடன் தவழ்ந்து வந்த தேரில்(காரில்) நீ வந்திறங்கியபோது – உன் வதனம் கண்டு ஒரு தேவதை என்றே எண்ணியது என் மனம். உனைப் பாராமல் உன் மேல் நான்கொண்ட ஈர்ப்பு உனைக் கண்டதும் பல மடங்கானது . கண்டதும் ஓடி வந்து கட்டியணைக்க வேண்டுமென்ற அவாவை கட்டுப் படுத்தினேன் […]