தேன்கூடு – 2009/10/31

கூகுளில்…நமது பிலாக்கர் அக்கவுண்டை பாதுகாப்பாக வைத்துக்கொள்வது பற்றிய ஒரு சிறு கட்டுரை இதோ. பிற தளங்கள் தரும் விட்ஜெட்டுகள் மூலம் பிரச்சனை வருவதற்கு வாய்ப்பிருக்கிறது. எனவே நம்பத்தகுந்த விட்ஜெட்டுகளை உபயோகிப்பதே நல்லது. நன்றாக இருக்கிறதென்று கிடைத்ததையெல்லாம் வைத்துக்கொள்ளக்கூடாது. நல்லது என எப்படி நம்புவது? கொஞ்சம் கஷ்டம்தான். Widget Codeல் ஏதாவது லிங்க் இருப்பது, அல்லது விளம்பர பாப் அப் விண்டோவை உருவாக்கும் விட்ஜெட்டுகளைத் தவிர்க்கலாம். விட்ஜெட் பாக்ஸ் ஒரு அருமையான விட்ஜெட் தரும் தளமாகும். அதே போல, […]

நறுமண தேவதை – சிறுகதை

இது டீதானா? இனிப்பா, உவர்ப்பா? இல்லை இதுதான் டீயின் சுவையா? ஒன்றும் புரியவில்லை சுதாகருக்கு. கலரைப் பார்த்தான், இதுவரை பார்த்திராத புது நிறமாய் இருந்தது. அதற்கு மேல் குடிக்க மனமின்றி, பாதியோடு வைத்துவிட்டான். நான்கு ரூபாயை வைத்துவிட்டுத் திரும்பினான். இது என்ன நறுமணம்? மெய்மறந்து ஒரு கணம் கண்களை மூடினான். சில்லரையை எடுத்துப் போட்டுவிட்டு கடைக்காரர் கேட்டார், ”சார், நாலு ரூபா குடுத்துட்டுப் போங்க”. திரும்பினான். அந்த மணம் இப்போது இல்லை. ”இப்பத்தான இங்க வச்சேன்”, நிதானமாகக் […]

வேட்டைக்காரன் பாடல்கள்

கடந்த வெள்ளிக்கிழமை, சிவகாசி செல்லும் பஸ். ஏதோ பாட்டு மெல்லிய இசையில் ஓடிக்கொண்டிருந்தது (அது வேட்டைக்காரன் பாட்டுன்னு நினைச்சீங்கன்னா தப்பு, அதான் மெல்லிசான்னு சொல்றேன்ல). நாம வழக்கம்போல ஜன்னல் வெளியே வேடிக்கை (அந்த இருட்டுக்குள்ள என்ன பாத்தன்னு கேக்கப்பிடாது, போற வர்ற வாகனங்களைப் பாத்துட்டு இருந்தேன்). சைடுல ஒருத்தர் திட்டுறது கேட்டது… ‘பிச்சக்காரப்பய, போடுறதுக்கு வேற பாட்டே கிடைக்கலயா இவனுக்கு?’ (இப்பவும் வேட்டைக்காரன் பாட்டுன்னு நினைக்க வேணாம்) என்னடான்னு பாட்டக் கேட்டேன், கட்டிப்புடி கட்டிப்புடிடால’ஜிங்கு ஜிக்ச்சா… ஜிக்கு […]

தேன்கூடு – 2009/10/22

கூகுள் தகவல்கள் கூகுள் க்ரோம் புதிய வசதிகளுடன் அருமையாக உள்ளது. வெற்றுப் பக்கத்தில், ஏற்கனவே திறந்த பக்கங்களின் சிறிய படங்கள் ஏற்கனவே தெரிந்ததல்லவா… இப்போது அவற்றை அருமையாக கையாளும் வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. கூகுள் க்ரோமில் தீம்கள் இருப்பது ஏற்கனவே தெரிந்ததே. இப்போது பிரபல ஆர்ட்டிஸ்ட்டுகள் உருவாக்கிய 95 தீம்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இங்கே சென்று மாற்றிக்கொள்ளலாம். இதில் ஒரு கவனிக்கவேண்டிய விசயம் – தீம் மாறும்போது க்ரோமை ரீஸ்டார்ட் செய்யவேண்டிய அவசியம் இல்லை. பாதுகாப்பான பாஸ்வேர்டு வைத்துக்கொள்வது பற்றிய […]

பேரு வைக்கிறதுக்கு ஒரு அக்கப்போரா?

ஏற்கனவே வானவில் வந்த கதை உங்களுக்கு தெரிஞ்சுருக்கும். தெரியாதுன்னா இங்க போயி பாத்துக்குங்க. அதுக்கப்புறம், அங்க பின்னூட்டத்துல கூட சிலபேர் சில தலைப்புகளை சிபாரிசு பண்ணினாங்க. அண்ணன் ஷங்கி என்சிலாடான்னு ஒரு ஐட்டத்த சொன்னாரு. விக்கில பாத்தா ஃப்ரூட் சாலட் மாதிரி தெரிஞ்சது. அப்றம் ஆதவன், இந்த பேரு ஏற்கனவே இருக்குன்னு ஒரு குண்ட தூக்கி போட்டுட்டான். அப்றம் ஜனா மனோரஞ்சிதம், இராகமாலிகா, பூந்தோட்டம், கூட்டாஞ்சோறு, பலதும் பத்தும், பழக்கூடை இப்படி வரிசையா பின்னிட்டாரு. சாம்ராஜ்ய ப்ரியன் […]

வெள்ளை மின்னலே…!

நீ என் அகத்திற்கு வருகிறாய் என்றதும் என் அகத்தின் உவகை உலகறியாதது. குறுகுறுப்புடனும் கூதுகலத்துடனும் காத்திருந்தேன் கண்மணியே, ஈராறு நாட்கள் பலநூறு யுகங்கள் போல்! என் தந்தை தமையனுடன் தவழ்ந்து வந்த தேரில்(காரில்) நீ வந்திறங்கியபோது – உன் வதனம் கண்டு ஒரு தேவதை என்றே எண்ணியது என் மனம். உனைப் பாராமல் உன் மேல் நான்கொண்ட ஈர்ப்பு உனைக் கண்டதும் பல மடங்கானது . கண்டதும் ஓடி வந்து கட்டியணைக்க வேண்டுமென்ற அவாவை கட்டுப் படுத்தினேன் […]