தளபதி – ஒரு பார்வை

சிறு வயதில் சூப்பர் ஸ்டார் என்ற மோகம் இருந்ததுண்டு. முதல் நாள் முதல் காட்சி பார்க்கும் அளவுக்கெல்லாம் அது இருந்ததில்லை, ‘ஸ்டைல்’ என்ற ஒற்றை வார்த்தைக்குள் மட்டுமே அது அடக்கம். அப்போது பார்த்த படம் – தளபதி. இப்போதோ, திரையில் தெரியும் ஸ்டைல் என்பதையும் தாண்டி, ரஜினி என்ற மனிதனை மிகவும் பிடித்துப் போயிற்று. கடந்த ஞாயிரு மதியம் மீண்டும் தளபதி படம் பார்க்க நேர்ந்தது. அப்போது பார்த்ததற்கும், இப்போது பார்ப்பதற்கும் எவ்வளவு வித்தியாசம்?! தளபதி = […]

இன்னும் இன்னமும்…….

உன்னை என் முன்னால் மண்டியிட வைத்திருப்பேன் மந்திரம் தெரிந்திருந்தால்…….! எனக்காய் நீ தவமிருக்கச் செய்திருப்பேன் தந்திரம் தெரிந்திருந்தால்…….! என்னிடம் உன்னை சரணடைய வைத்திருப்பேன் சாதுரியம் தெரிந்திருந்தால்…….! என்னை நீ சுற்றி வர செய்திருப்பேன், சூழ்ச்சி தெரிந்திருந்தால்…….! ஆனால்…. உன்னை காதலிக்க மட்டுமே தெரிந்திருக்கிறேன்?! ஆகையால் என் காதல் கை கூடுமோ என்னும் நினைவில் நிமிடங்கள் யுகங்களாய் சுகங்கள் இழந்து வாழ்கிறேன், இன்னும் இன்னமும்…… பி.கு:- இது நான் காதலிக்கும் முன் 1995-ம் ஆண்டு கல்லூரி முதலாமாண்டு ஆங்கில […]

புரிதலில்லாக் காதல்

அன்று இளசுகள் நாம். காதலுக்கு அர்த்தம் தெரியுமா நமக்கு? நாம் செய்ததுதான் காதல் என நம்பிக்கொண்டிருந்தோம். நெடுநாள் வாழ்ந்த நம் நட்புக்குள், ஏதோ ஒரு இன்பம், மெல்லிதாகப் படர ஆரம்பித்தது. அது நமக்கும் பிடித்திருந்தது. லேசாகப் படர்ந்ததினை, உரம் போட்டு வளர்க்க நாமொன்றும் அஞ்சவில்லை. நமது நண்பர்கள் கூட அவரவர் பங்குக்கு லேசாக தண்ணீர் தெளித்தனரே! படர்ந்த அந்தக் கொடி, நம் காலைச் சுற்றிய பாம்பு என நமக்கு அப்போது தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை. சந்தேகம் வலுத்த […]

சண்டை வராமலிருக்க ஒரே வழி

போனதடவ மச்சான் சக்கரை அட்வைஸ்+தத்துவ மழையில் ஒரு பதிவு போட்டிருந்தார். ஆனா நமக்குத்தான் ஒரு எழவும் புரியல. பதிவுலக வரலாறு தெரிஞ்சாத்தான் இவங்களோட பேனா சண்டை (பேனா முனை, கத்தி முனையை விடக் கூர்மையானது) புரியும் போல இருக்கு. புரியலன்னா போய்கிட்டே இருடா ஏனாவானான்னு(எவனோ ஒருவன், ஹி ஹி ஹி…) போய்கிட்டே இருந்தேன். இந்தத் தடவ பைத்தியக்காரனோட பதிவப் பார்த்தேன். சரி, நமக்கு இப்பவும் புரியாதுன்னு அப்படியே விட்டுருக்கனும். ஆபீஸ்ல, ஒரு வார புயலுக்குப் பின்னாடி, கொஞ்சம் […]

லேண்ட் வேல்யு ஏற நானுமா காரணம்?

சென்ற வாரம் சென்னை மீனம்பாக்கம் சர்வதேச விமான நிலையம் சென்றிருந்தேன். பைக் பார்க்கிங் விட்டுவிட்டு எவ்வளவு என்றேன்; சொன்னார்கள். சொன்ன விலையைக் கேட்டு அதிர்ந்துவிட்டேன். ‘15 ரூபாய்’. ங்க்கொய்யால… காலையில் நான் சாப்பிடும் டிபனின் விலை! இதெல்லாம் நியாயமா? எக்மோர்ல இதே பைக்க விடுறதுக்கு 3 ரூபாய். இங்க மட்டும் 15 ரூபாயா? என்ன நெனப்புலதான் இப்படி பண்றாங்க? இங்க வர்றவங்க எல்லாரும் பணக்காரங்கதானா? இல்ல என்ன மாதிரி மிடில் கிலாஸ் வரமாட்டாங்களா? இல்ல வரக்கூடாதுன்னு முடிவு […]

மீன் சாப்பாடு

நேற்று மதியம் தேனாம்பேட்டை டிஎம்எஸ் அருகே வேலை. எங்கு சாப்பிடுவதென்று தெரியவில்லை, தேடினேன். பேருந்து நிறுத்தம் பின்னாலேயே ஒரு சைவ உணவகம், வெரைட்டி ரைஸ் மட்டுமே இருந்தது. அருகிலேயே ஒரு அசைவ ஏசி உணவகம், பார்த்தவுடனேயே விலை அதிகம் என ஒதுங்கிகொண்டேன். பின் நண்பர் ஒருவருக்குப் போன் செய்து விசாரித்ததில் தெரிந்துகொண்ட இடம் இது. பேருந்து நிருத்தத்திற்கு சற்று தள்ளி, ஓட்டல் மேரியாட்டுக்கு நேர் எதிரே மீன் வளத்துறை அலுவலகம் உள்ளது. அதன் முன்னே சிவப்பு, மஞ்சள் […]