கடந்த வெள்ளிக்கிழமை

இந்த வெள்ளியும் வழக்கம்போல விடிந்தது. முந்தைய நாள் மாலை மழை பெய்தபடியால் அன்றும் பெய்யும் என்றே தோன்றியது. அதனால் அன்று காரில் கிளம்பினேன். அதற்கு முந்தைய நாள் வியாழக்கிழமை, உடன் பணிபுரியும் தோழி ஒருவருக்குப் பிறந்தநாள் என்று மதிய உணவுக்கு வெளியில் செல்லவேண்டியது இருந்தது. மூன்று மணி நேரம் காலி. வந்த பின்னும் அங்கே இங்கே என்று சிலருக்கு உதவி செய்தபடியால், என்னுடைய வேலைகளை முடிக்க இயலவில்லை. அதனால் வெள்ளிக்கிழமை அந்த வேலைகளையும் சேர்த்து முடிக்கவேண்டிய கட்டாயத்தில் […]

தேன்கூடு – 2009/12/20

முக்கு: தொழில்நுட்பம் சார்ந்த பதிவுகளை இங்கே தனியே பதிவிடுவதால், இனி தேன்கூட்டில் அந்த மாதிரி தகவல்கள் இடம்பெறாது. வெளிநாட்டில் அண்ணன் கிகிஅண்ணன் கிகி இப்போது சார்ஜாவில் இருக்கிறார், மனைவியுடன். சொந்த விசயமாக சென்றுள்ள அவர், டிசம்பர் முழுவதும் அங்கேதான் இருப்பார். குப்பைத்தொட்டி நான் ஆதவன் நான் ’கவனித்துக்கொள்கிறேன்’ என சொல்லியிருக்கிறான். நல்லா கவனிச்சுக்கோப்பா. — பதிவர் சந்திப்புகள்வரும் வாரம் ஏதேனும் ஒரு நாள் நண்பர் ரோமியோபாய் சந்திக்க வருவதாகச் சொல்லியிருக்கிறார். வீட்டுக்குப் போகும் வழியில் சைதாப்பேட்டை ரயில் […]

புதுத்தகம்

கதிரவன் ஸ்டோர். பள்ளி நாட்களில் மறக்க முடியாத கடை. இந்தக் கடை முதலாளி பெரும்பாலன மாதங்கள் ஈ ஓட்டிக்கொண்டிருப்பார். கடையில் ஒரே ஒரு உதவியாளர் மட்டுமே இருப்பார். ஆனால் ஜூன் மாதம் வந்துவிட்டால் அவருக்கும் அவரது கடைக்கும் தனி மவுசு வந்துவிடும். கடையில் அதிகமாக மூன்று பேரைப் போட்டிருப்பார். கடையில் கூட்டம் நிரம்பி வழியும். சொந்தபந்தம், தெரிந்தவர்களெல்லாம் இப்போதுதான் தங்களது நெருக்கத்தைக் காண்பித்துக்கொண்டிருப்பார்கள், கடை வாசலில். கதிரவன் ஸ்டோர் ஒரு புத்தகக் கடை. புத்தகக் கடை என்றதும் […]

தீபாவளி சிறப்புப் பதிவு 2009?

2009 தீபாவளி கடந்து நாட்களாகிவிட்டாலும், அன்புத் தம்பி அன்புத்தம்பி அழைத்ததற்காக இந்த தீபாவளி் தொடர் பதிவு.   1) உங்க‌ளைப் ப‌ற்றி சிறு குறிப்பு ?சிறு குறிப்பு என்ன, கொஞ்சம் பெருசாவே தெரிஞ்சுக்குங்க. இங்க, இங்க, இங்க, இங்கயெல்லாம் போய் பாத்து தெரிஞ்சுக்கலாம். (இன்னும் ரெண்டு தொடர் பதிவு எழுதினா நம்ம ஜாதகமே நெட்டுல வந்துரும் போல இருக்கு…) 2)தீபாவ‌ளி என்ற‌வுட‌ன் உங்கள் நினைவிற்கு வ‌ரும் (ம‌ற‌க்க‌ முடியாத‌) ஒரு ச‌ம்ப‌வ‌ம் ?கல்லூரி மூன்றாம் ஆண்டில் வந்த […]

தேன்கூடு – 2009/11/11

பதிவர் சந்திப்பு தள்ளிவைப்புசென்ற வாரம் நடைபெறவிருந்த பதிவர் சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அநேகமாக வரும் சனிக்கிழமை இருக்கலாம். போன தடவை மழை வந்துவிட்டதே என கூரைக்குள் கூடுமாறு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த தடவை அந்த இடத்திற்கே செல்ல முடியாதபடி மழை. இயற்கையை வெல்ல யாரால் முடியும். அடுத்த தடவை அவரவர் இடத்திலேயே இருந்தபடி பதிவர் சந்திப்பு நடத்துவது பற்றி யோசனை ஏதாவது இருந்தால் சொல்லுங்கள். 🙂 இமெயில் அட்டாச்மெண்ட்இமெயிலில் அட்டாச்மெண்ட் அனுப்பவது பற்றிய சுவையான கட்டுரை ஒன்றை சமீபத்தில் […]

பிடிக்கும்… ஆனா பிடிக்காது

இந்த சுவாரஸ்யமான தொடர்பதிவிற்கு அழைத்த அண்ணன் இனியவன் என்.உலகநாதன் மற்றும் ஆதவன், ஜனா அவர்களுக்கு எனது நன்றிகள். விதிமுறைகள்: 1. பிடித்தவர்களும், பிடிக்காதவர்களும் தமிழ்நாட்டிற்குள்ள இருக்கணும்.2. நீங்க இதை எழுத அழைக்கிற பதிவர் குறைந்தது இருவராகவும், அதிகபட்சம் ஆறு பேராகவும் இருக்கலாம்3. பிடித்தவரோ, பிடிக்காதவரோ கண்டிப்பாய் பிரபலமானவராய் இருக்க வேண்டும்.4. கேள்விகள் குறைந்தது ஏழு இருக்கணும். ஆனா பத்தைத் தாண்ட வேண்டாம். உண்மையைத்தான் சொல்லவேண்டும் என்று இருக்கிறதா எனப் பார்த்தேன், இல்லை. அதையும் விதிமுறையில் சேர்த்திருக்கலாம். கருத்து:இவரைப் […]