1887 தொடக்கம் 1889 வரையான காலப்பகுதியில், இவ்வமைப்பு, பிரெஞ்சுப் புரட்சியின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியான, எக்ஸ்பொசிசன் யூனிவேசெல் (1889) என்னும் உலகக் கண்காட்சி விழாவுக்கு, நுழைவாயில் வளைவாகக் கட்டப்பட்டது. 1889,மார்ச் 31 ஆம் தேதி தொடக்கவிழா நடைபெற்று, மே 6 இல் திறந்துவிடப்பட்டது. 300 உருக்கு வேலையாட்கள், 5 இலட்சம் ஆணிகளைப் பயன்படுத்தி, 18,038 உருக்குத் துண்டுகளை ஒன்றுடனொன்று பொருத்தினார்கள். அக்காலத்திய பாதுகாப்புத் தரத்தைக் கருத்தில் கொள்ளும்போது, இதன் கட்டுமானக் காலத்தில், உயர்த்திகளைப் (lift)பொருத்தும்போது, ஒரேயொரு தொழிலாளி மட்டுமே இறக்க நேர்ந்தது குறிப்பிடத்தக்கதாகும்.
இக் கோபுரம், அதன் உச்சியிலுள்ள, 20மீட்டர் உயரமுள்ள, தொலைக்காட்சி அண்டெனாவைச் சேர்க்காது, 300 மீட்டர்கள் (986 அடிகள்) உயரமானதும், 10,000 டன்னுக்கும் கூடிய நிறையை உடையதுமாகும். இது கட்டிமுடிக்கப்பட்டபோது, உலகின் அதிக உயரமான அமைப்பு இதுவேயாகும். இதன் பராமரிப்புக்காக, ஏழு ஆண்டுகளுக்கு ஒரு முறை 50 டன் கடும் மண்ணிறப் பூச்சு மை(paint) பயன்படுத்தப்படுகிறது. வெப்பநிலைமாறும் போது, உருக்கு சுருங்கி விரிவதன் காரணமாக, ஈபெல் கோபுரத்தின் உயரத்தில் பல சென்டி மீட்டர்கள் வேறுபாடு ஏற்படுகின்றது.
இது கட்டப்பட்ட காலத்தில், எதிர்பார்க்கக் கூடியவகையில், பொதுமக்களிடமிருந்து எதிர்ப்பு இருந்தது. பலர் இது பார்வைக்கு அழகாக இராதென்றே கருதினார்கள். இன்று இது உலகிலுள்ள மிகக் கவர்ச்சிகரமான கட்டிடக்கலைகளுள் ஒன்று என்று கருதப்படுகிறது.
ஆரம்பத்தில், இக் கோபுரத்தை 20 ஆண்டுகள் அவ்விடத்தில் நிறுத்திவைப்பதற்கு ஈஃபெல் அநுமதி பெற்றிருந்தார், எனினும், தொடர்புகளுக்கு இது மிகவும் பெறுமதி மிக்கதாக இது இருந்ததனால், அனுமதிப்பத்திரம் காலாவதியான பின்னும், கோபுரம் அங்கே நிற்க அனுமதிக்கப்பட்டது.
(என்ன அநியாயம் இது 20 ஆண்டுகள் என்று சொல்லி 120 ஆண்டுகள் ஒன்றும் ஆகாமல் இருப்பதெல்லாம் கட்டுமானக்கலையா?! நம் டெல்லி மேம்பாலம் போல் கட்டும்போதே இடிந்து வீழ்வது அல்லவா கட்டுமானக்கலை)
ஜனவரி 12, 1908 ல், முதலாவது தொலைதூரத் தகவல் வானொலி கோபுரத்திலிருந்து அனுப்பப்பட்டது. 1929 ல், கிறிஸ்லெர் கட்டிடம் நியூ யோர்க்கில் கட்டி முடிக்கப்பட்டபோது, ஈபெல் கோபுரம், உலகின் அதி உயர்ந்த அமைப்பு என்ற பெயரை இழந்தது. அடொல்ப் ஹிட்லர், [[இரண்டாவது உலக யுத்தத்தின்போது, பாரிஸுக்கு விஜயம் செய்தபோது, அவர் 1792 படிகளையும், ஏறியே உச்சிக்குச் செல்லட்டும் என்பதற்காக, பிரெஞ்சுக்காரர் அதன் உயர்த்திகளைச் செயலிழக்கச் செய்தனர். அதனைப் பழுதுபார்க்கத் தேவைப்படும் உதிரிப்பாகத்தைப் பெற்றுக்கொள்வது, யுத்தச் சூழலில் முடியாது என்று கருதப்பட்டதெனினும், நாஸிகள் புறப்பட்டுச் சென்ற சில மணி நேரத்திலேயே அது செயல்படத் தொடங்கிவிட்டது. ஹிட்லர் கீழேயே நின்றுவிட்டுச் சென்றுவிட்டார். ஜனவரி 3, 1956 ல் தீயொன்றினால் கோபுரத்தின் மேற்பகுதி சேதமடைந்தது. 1959ல் தற்போதுள்ள வானொலி அலைவாங்கி அதன் உச்சியில் பொருத்தப்பட்டது
என் வேலை முடிந்த பின் என் சகதர்மிணியை அருகில் விட்டு ஒரு போட்டோ எடுத்தேன்
அருமைங்க ..உண்மையாவே கலக்கிட்டீங்க.
கோபுரத்தை பற்றி அதிக தகவல்கள் தெரிந்து கொள்ள முடிந்தது..நன்றி
நீங்க அமைத்த கோபுரமும் சூப்பர்…. நிஜமாகவே!
உங்கள் அருமையான பதிவிற்கு என் அன்பான வாழ்த்துக்கள்
ஆமா! இந்த பதிவை போய் எதற்கு மொக்கை பிரிவில் சேர்த்து இருக்கீங்க..கிர்ர்ர்ர்
//அருமைங்க ..உண்மையாவே கலக்கிட்டீங்க.
கோபுரத்தை பற்றி அதிக தகவல்கள் தெரிந்து கொள்ள முடிந்தது..நன்றி \
எல்லாம் விக்கிபீடீயாவிலிருந்து சுட்டது.
//நீங்க அமைத்த கோபுரமும் சூப்பர்…. நிஜமாகவே!\
நிஜமாவா?!!!
//ஆமா! இந்த பதிவை போய் எதற்கு மொக்கை பிரிவில் சேர்த்து இருக்கீங்க..கிர்ர்ர்ர்\
இல்லலல… நான் உருவாக்கின கோபுரத்தை மொக்கையாக நினைத்தேன்.
அண்ணே,
ரொம்ப அழகா சொல்லியிருக்கீங்க. இவ்வளவு நல்லா சொல்லுவீங்கன்னு எதிர்பார்க்கவே இல்லை.
//அண்ணே,
ரொம்ப அழகா சொல்லியிருக்கீங்க. இவ்வளவு நல்லா சொல்லுவீங்கன்னு எதிர்பார்க்கவே இல்லை.//
யோவ் என்ன நக்கலா?
பல தகவல்களை பதிந்ததும் இல்லாமல் இரண்டு கோபுரங்களை உண்டாக்கிய கி.கி அண்ணனை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.
சூப்பர் கி.கி 🙂
//☀நான் ஆதவன்☀ said…
யோவ் என்ன நக்கலா?//
அய்யய்யோ… தப்பா நெனைக்காத மச்சி.
இதப் பத்தி அண்ணன் கிட்ட பேசும்போது மொக்கையா போடுற மாதிரிதான் பேசினார், இப்படி செம தகவகல்களுடன் வந்திருப்பதைக் கண்டு அசந்துவிட்டேன். அதான் இதுக்கு அர்த்தம்.
தகவல்களுடன் உங்கள் பகிர்வுக்கு நன்றிகள்.
சாந்தி
//எவனோ ஒருவன் said…
அண்ணே,
ரொம்ப அழகா சொல்லியிருக்கீங்க. இவ்வளவு நல்லா சொல்லுவீங்கன்னு எதிர்பார்க்கவே இல்லை.\
நானும் எதிர்பார்க்கவே இல்லை.
//☀நான் ஆதவன்☀ said…
பல தகவல்களை பதிந்ததும் இல்லாமல் இரண்டு கோபுரங்களை உண்டாக்கிய கி.கி அண்ணனை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.
சூப்பர் கி.கி :)\
நக்கல் ஒன்றும் இல்லையே
சகோதரி சாந்தியின் வருகைக்கு மிகவும் நன்றி
வருகைக்கு நன்றி நண்பரே. என்னைச் சொல்லி விட்டு உள்ளே வந்தால் ஒரு சுரங்கமே என்னை வரவேற்றது. குறிப்பாக கேரளா? திருப்பூர் போன்ற இடங்களில் இது குறித்தே பத்து பதிவுகள் எழுத முடியும்? மேலும் நீங்கள் கேட்ட கேள்விகளுக்கு, உங்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் என்னுடைய பழைய பதிவான ஆங்கில மீடியமும் அரை லூஸ் பெற்றோர்களும் (அவஸ்யம் படித்து பின்னூட்டம் இடுக) என்ற பதிவை படித்துப் பாருங்கள். ஏற்றுமதியாளருக்கு அமைந்த வாழ்க்கை எப்படி இருக்கும். கணிணி மூலம் அலைபேசி தொலைபேசி முக்கியத்துவம் குறித்தும், என்னுடைய வாழ்நிலையின் அடிப்படையை நீங்கள் புரிந்து கொள்ள முடியும். மேலும் தமிழ் ஆங்கிலம் தட்டெழுத்து என்பது இருபது வருடங்களுக்கு முன் ஹைஸ்பீடு என்ற நிலையில் பொழுது போகாமல் கற்றுக்கொண்டது நீங்கள் கேட்கும் அளவிற்கு வளர்த்து உள்ளது. நீங்கள் நாகரிகமாக கேட்ட கேள்வியை நேற்று வந்த பதிவுகளை பின்னூட்டத்தை படித்துப் பாருங்கள். திருப்பூர் நண்பர் சொன்னதை அதில் உள்ள பதிலை. அதன் அர்த்தமே புரிந்து கொள்ளாமல் அவஸ்த்தை பட்டவன் என்றால் என்னைப் பற்றி வேறு என்ன சொல்லமுடியும்? வாழ்த்துக்கள்.
texlords@gmail.com