புரோட்டா ஸ்டால்

சென்னை வந்த பிறகுதான் நம்ம ஊரு புரோட்டாவின் அருமை தெரிந்தது. வந்த புதிதில் பல இடங்களில் சாப்பிட்டிருப்பேன். ஆனால் எதிலுமே திருப்தி இல்லை. கொஞ்ச நாளில், இனி இங்கு புரோட்டா வாங்கி சாப்பிடவே கூடாது என முடிவு செய்தாயிற்று. திருச்செந்தூரில், பள்ளி காலங்களில், ஏஒன் புரோட்டாதான் நம்ம ஃபேவரிட். அதுவும் பார்சல்தான். பிச்சுப்போட்டு சால்னா ஊத்தி வாங்கி வருவோம். வீட்டிற்கு வந்து திறந்து பார்த்தால், புரோட்டா சால்னாவுக்குள் ஊறிப்போய், பார்க்கவே அமிர்தமாய் இருக்கும். திண்றால்…. ம்ம்ம்ம். சிறிது […]

குரங்கு அருவிக்கு ஒரு குட்டி விசிட்………

ஜூலை 29-ம் தேதி கோவையில் இருந்து பொள்ளாச்சிக்கு நானும் என் மனைவியும் மற்றும் 2 தம்பிகளுமாக இரண்டு இரண்டுசக்கர வாகனத்தில் சென்றோம் .சென்றது தம்பிகளில் ஒருவனுக்கு மண்டையில் உள்ள மசாலா பாக்கெட் சேதமடைந்துள்ளதா என்பதை CT SCAN செய்து பார்ப்பதற்காக. அதில் பிரச்சினை ஒன்றும் இல்லை என்று தெரிந்ததும் சந்தோஷத்தை கொண்டாட என்ன செய்யலாம் என யோசித்தோம். மனைவி கூட வந்ததால் டாஸ்மாக் செல்ல முடியவில்லை. எனவே பொள்ளாச்சியிருந்து வால்பாறை செல்லும் வழியில் 30-வது கிலோமீட்டரில் உள்ள […]

அன்று ஓரு இரவில்………(2)

…………..வெளிச்ச புள்ளிகள் என்னை நெருங்க நெருங்க, என் உடலெல்லாம் சிறிது நடுங்க துவங்கியது. //குறை ஒன்றும் இல்லை !!! said… அப்புறம் அந்த ரெண்டு வெளிச்ச் புள்ளி ஏதாவடு மிருகம் தானே? இல்ல வண்டியா?\ நண்பர் நினைததுபோல் ஏதாவது மிருகமா..? இல்ல எதாவது வண்டியா..? என பலவாறு யோசித்து பார்த்தேன் ஆனால் அப்படி தோன்றவில்லை. ஏனென்றால் அந்த வெளிச்சப்புள்ளிகள், ஒரே நேர்க்கோட்டில் வராமல் வளைந்தும், நெளிந்தும், மேலும், கீழுமாக நெருங்கி வந்து கொண்டிருந்தது. திரும்பி வந்த வழியே […]

பள்ளிக்கூடம் 3 – பம்பரம்

பள்ளிக்கூடம் 2 – உப்புமூட்டசண்ட இதன் தொடர்ச்சி… — சின்ன வயதில் பல விளையாட்டுக்கள் விளையாண்டபோதும், இந்தப் பம்பரமும், கோலிக்காயும்தான் வீரவிளையாட்டுக்களாக கருதப்பட்டது எங்களால். அதிலும் பம்பரத்தின்மீது கொஞ்சம் ஈர்ப்பு அதிகமே. முந்தைய பதிவில் உப்புமூட்டசண்ட விளையாடுவது எப்படி என்பது பற்றி பார்த்தோம் (டேய்…. ச்சூ ச்சூ…), இங்கு பம்பரம் விளையாடுவது எப்படி என்பது பற்றி பார்க்கலாம். (இதில் நிறைய விடுபட்டிருக்கலாம், முடிந்தவரை ஞாபகப்படுத்தி எழுதியிருக்கிறேன்) பம்பரத்தில் வட்டம் பொடியர்களின் விளையாட்டாகக் கருதலாம், இதில் பம்பரத்திற்கு ஆபத்து […]

அன்று ஒரு இரவில்……….

நான் சத்தியமங்கலத்திற்கு அருகாமையில் உள்ள தூக்கநாயக்கன் பாளையத்தில் பட்டய படிப்பில் காலடி எடுத்து வைத்த முதலாம் ஆண்டு (1994) நடந்த திகில் சம்பவம். நான் அங்கு படிக்க சென்ற காலத்தில் என் சக நண்பர்களிடம் “நான் நாகர்கோவில்காரன் எனக்கு பயம் என்பது கிடையாது, இரவானாலும் பகலானாலும் எவ்விடத்திற்கும் செல்ல அஞ்சமாட்டேன், சுடு காட்டிற்கு வேண்டுமானாலும் இரவில் செல்வேன்” என பிதற்றி திரிவேன் (உண்மையும் கூட) இதை அடிக்கடி கேட்ட நண்பர்கள் என்னை என்றாவது சோதித்து பார்க்கும் திட்டத்தில் […]

பள்ளிக்கூடம் 2 – உப்புமூட்டசண்ட

பள்ளிக்கூடம் – இதன் தொடர்ச்சி…—அவற்றுள் முக்கியமானது உப்புமூட்டசண்ட. கொஞ்சம் கட்டுமஸ்தான பசங்க, பொடிப்பசங்கள உப்புமூட்டயா தூக்கிகுவாங்க. நாம எப்பவும் மேலதான். மரத்தடியில் சுற்றி நின்றுகொண்டு ‘ரெடி… ஸ்டார்ட்’ என சொன்னவுடன் ஓடி வந்து ஒருவரோடு ஒருவர் முட்டி மோதிக்கொள்வோம். அடுத்தவரை இடித்து கீழே விழச்செய்வதுதான் ஒரே குறி. குதிரை கீழே விழுந்தாலோ, உப்பு கீழே விழுந்தாலோ அவுட். அந்த ஜோடி ஒதுங்கிக்கொள்ள வேண்டும். சில நேரங்களில் ரெண்டுமே சேர்ந்து குடைசாயும். இதில் எப்போதும் முக்கியமான நேரம் ஒன்று […]