எனக்கு வந்த கு.த.சே.கள் – 7

1)நான் லூசுநான் லூசுநாந்தான் லூசுநான் மட்டுமே லூசுநான் லூசுநான் எப்போதுமே லூசு ஓக்கே ஒக்கே, நீ இவ்வளவு தூரம் சொல்ற…நான் ஒத்துக்கிறேன். 2)விண்ணைத் தொடுவதற்குசக்தி இருந்தால்அங்கும் உன் பெயரை எழுதுவேன்நீ ஒரு ஃப்ராடு என்று அய்யய்யோ!சாரி, என் ஃப்ரெண்ட் என்று. 3)காலேஜ் லொல்லு:1: டேய் மச்சி, உனக்கு எஸெமெஸ் ஃப்ரீதான? எனக்கு மெசேஜ் அனுப்புடா…2: தோடா… எனக்கு இன்கமிங் கூடத்தான் ஃப்ரீ, எனக்கு கால் பண்ணு பாக்கலாம். 4)போலீஸ்; எதுக்கு உன் லவ்வர கிணத்துல தள்ளிவிட்ட?காதலன்: அவதான் […]

பள்ளிக்கூடம் 2 – உப்புமூட்டசண்ட

பள்ளிக்கூடம் – இதன் தொடர்ச்சி…—அவற்றுள் முக்கியமானது உப்புமூட்டசண்ட. கொஞ்சம் கட்டுமஸ்தான பசங்க, பொடிப்பசங்கள உப்புமூட்டயா தூக்கிகுவாங்க. நாம எப்பவும் மேலதான். மரத்தடியில் சுற்றி நின்றுகொண்டு ‘ரெடி… ஸ்டார்ட்’ என சொன்னவுடன் ஓடி வந்து ஒருவரோடு ஒருவர் முட்டி மோதிக்கொள்வோம். அடுத்தவரை இடித்து கீழே விழச்செய்வதுதான் ஒரே குறி. குதிரை கீழே விழுந்தாலோ, உப்பு கீழே விழுந்தாலோ அவுட். அந்த ஜோடி ஒதுங்கிக்கொள்ள வேண்டும். சில நேரங்களில் ரெண்டுமே சேர்ந்து குடைசாயும். இதில் எப்போதும் முக்கியமான நேரம் ஒன்று […]

பள்ளிக்கூடம்

அன்பர் ஜோதி அவர்கள் தொடக்கப்பள்ளி தொடர் பதிவிற்கு அழைத்திருக்கிறார். நன்றி ஜோதி. உண்மையை சொல்லப்போனால் சிறு வயது ஞாபகங்கள் சில மட்டுமே ஞாபகம் இருக்கின்றன. ஆயினும் நினைவில் நிற்பவை யாவுமே பசுமை என்னும் சொல்லை ஞாபகப்படுத்தும் விதமாகவே உள்ளன. எழுத ஆரம்பித்த புதிதில், என்னதான் எழுதுவது என தினமும் யோசித்துக்கொண்டே இருப்பேன். ’எவ்வளவுதான் எழுத முடியும் நம்மால்?’ என்ற கேள்வியும் உண்டு. ஆனால், போகிற போக்கைப் பார்த்தால் அதைப் பற்றி கவலைப்படவே தேவையில்லை போலிருக்கிறது. தொடர் தொடர் […]

இன்னும் இன்னமும்…….

உன்னை என் முன்னால் மண்டியிட வைத்திருப்பேன் மந்திரம் தெரிந்திருந்தால்…….! எனக்காய் நீ தவமிருக்கச் செய்திருப்பேன் தந்திரம் தெரிந்திருந்தால்…….! என்னிடம் உன்னை சரணடைய வைத்திருப்பேன் சாதுரியம் தெரிந்திருந்தால்…….! என்னை நீ சுற்றி வர செய்திருப்பேன், சூழ்ச்சி தெரிந்திருந்தால்…….! ஆனால்…. உன்னை காதலிக்க மட்டுமே தெரிந்திருக்கிறேன்?! ஆகையால் என் காதல் கை கூடுமோ என்னும் நினைவில் நிமிடங்கள் யுகங்களாய் சுகங்கள் இழந்து வாழ்கிறேன், இன்னும் இன்னமும்…… பி.கு:- இது நான் காதலிக்கும் முன் 1995-ம் ஆண்டு கல்லூரி முதலாமாண்டு ஆங்கில […]

ஏதாவது கெடச்சுதா?

இந்த மொக்கை, மொக்கைவிரும்பி ஜெகநாதன் அண்ணன் அவர்களுக்கு சமர்ப்பனம்.—நா: ஏண்டா, கல்யாணமாகி மூனு மாசந்தான் ஆகுது… அதுக்குள்ள நைட்டுல வெளிய குடிக்க வந்துட்டியேடா! ஜெ: அவ்ளோதாண்டா மாப்ள. நா: அவளுக்குத் தெரியுமா? ஜெ: அவளுக்கு தெரியும்… ஆனா அம்மாக்குதான் தெரியாது. எங்கம்மாவப் பொறுத்தவர இப்ப நா ஆபீஸ்ல இருக்கேன். மத்தத அவ சமாளிச்சிக்குவா. நா: ச்ச… இந்த மாதிரி பொண்ணு எனக்கு எனக்கு கெடக்குமாடா? பெரியண்ணன்: அவனாவது பரவால்ல… இவனப்பாரு, ஒரு மாசந்தான் ஆகுது, பொண்டாட்டி ஊர்ல […]

புரிதலில்லாக் காதல்

அன்று இளசுகள் நாம். காதலுக்கு அர்த்தம் தெரியுமா நமக்கு? நாம் செய்ததுதான் காதல் என நம்பிக்கொண்டிருந்தோம். நெடுநாள் வாழ்ந்த நம் நட்புக்குள், ஏதோ ஒரு இன்பம், மெல்லிதாகப் படர ஆரம்பித்தது. அது நமக்கும் பிடித்திருந்தது. லேசாகப் படர்ந்ததினை, உரம் போட்டு வளர்க்க நாமொன்றும் அஞ்சவில்லை. நமது நண்பர்கள் கூட அவரவர் பங்குக்கு லேசாக தண்ணீர் தெளித்தனரே! படர்ந்த அந்தக் கொடி, நம் காலைச் சுற்றிய பாம்பு என நமக்கு அப்போது தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை. சந்தேகம் வலுத்த […]